கரூர், ஜூன் 30 -
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் சுப்பன் ஆசாரிகளத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதி, தெரு விளக்கு வசதி இல்லை. இத னால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.
சுப்பன் ஆசாரிகளத்திற்கு செல்வதற்கு கன்னி வாய்க்கால் வரை தார்ச்சாலை, தெரு விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், குளித்தலை வட்டாட்சி யர், மருதூர் பேரூராட்சி உள்ளிட்ட அரசு அலுவ லர்களிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கி யும், போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.
பொதுமக்களின் நியாயமான கோரிக் கையை நிறைவேற்றாமல், கிடப்பில் போட்டுள்ள மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரை கண்டித்தும், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி தர வலியுறுத்தியும் சிபிஎம் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில், குளித்தலை காந்தி சிலை முன்பு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் பானைகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செய லாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத் தில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை குளித்தலை போலீ சார் கைது செய்தனர்.
போராட்டம் தொடரும் சாலை
, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வரை, கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தொடர்ந்து குடியேறும் போராட்டம் நடைபெறும் என குளித்தலை ஒன்றிய செயலாளர் இரா.முத்துச்செல்வன் தெரிவித்தார்.