ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) கவுரவத் தலைவர் என்.வி.கிருஷ்ணாராவ் 36 ஆண்டுகள் ஐசிஎப் நிறுவனத்தில் பணியாற்றி புதன்கிழமை (நவ. 30) பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி செவ்வாயன்று (நவ. 29) நடைபெற்ற விழாவில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனிடம் “தீக்கதிர்” வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாயும், நிர்மல் பள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கினார். சங்கத்தின் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பேராசிரியர் காளீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.