districts

நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

பாபநாசம், ஏப்.11 - பாபநாசம் அருகே சாலியமங்கலம் கடைவீதியில் ரூ.15, 00,000 மதிப்பில் ஒன்றிய பொது நிதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடை பெற்றது. திறப்பு விழாவில் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றி யத் தலைவர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் மதுமதி,  ஊராட்சி மன்றத் தலைவர் சக்தி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஆனந்த் ராஜ், முருகன் கலந்து கொண்டனர்.