districts

img

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட கோரிக்கை

பெரம்பலூர், அக்.16 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்  பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை  வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமரி ஆனந்தன் நோக்க உரையாற்றினார். கோட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் கோரிக்கைகளை குறித்து விளக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்டச்  செயலாளர் அகஸ்டியன் வாழ்த்துரை வழங்கி னார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். கோட்ட  பொறியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியா ளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1900 என  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றக் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.