கீழ கொட்டையூரில் பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூலை 25- தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற்றது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வை யாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 2516 விவசாயிகள் 3,352 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண் ருட்டி, விழுப்புரம், மகுடஞ் சாவடி, தேனி, விருதுநகர், கொங்கணாபுரம், தெலுங் கானா உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 11 வணி கர்கள் கலந்து கொண்ட னர். பருத்தியின் மதிப்பு ரூ.2.30 கோடி. தனியார் வணிகர்கள் குவிண்டாலுக்கு அதிக பட்சம் ரூ.7139, குறைந்த பட்சம் ரூ.6519, சராசரி ரூ. 6989 என விலை நிர்ண யம் செய்தனர்.
செந்துறையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க கோரிக்கை
அரியலூர், ஜூலை 26- செந்துறையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கு. அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மணி வேல் கண்டன உரை யாற்றினார். அரியலூர் மாவட்டம் செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், 3 குற்றவியல் சட்டங் களை திரும்பப் பெற வேண்டும். செந்துறை யில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். முந்திரி விவசா யிகளுக்கு வறட்சி நிவார ணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பாபநாசம், ஜூலை 25- விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய அறி வுறுத்தப்ப ட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சா வூர் மாவட்டம் பாபநாசம் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் சிநேகப் பிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிர தான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ், பாபநாசம் வட்டாரத்தில் காரிப் பருவத்தில் வாழை சாகுபடி செய்யவுள்ள விவ சாயிகள், தங்கள் பயிரினை, இயற்கை சீற்றங்களி லிருந்து பாதுகாத்துக் கொள்ள காப்பீடு செய்யலாம். வாழைச் சாகுபடி செய் யும் விவசாயிகள் ஒரு ஏக்க ருக்கு ரூ.2114 பிரீமியம் தொகையினை செலுத்தி பயன்பெறலாம். 2024 செப் டம்பர் 16 ஆம் தேதிக்குள் பிரீ மியம் தொகையினை செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்க ளுக்கு பாபநாசம் தோட்டக் கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை தொடர்பு கொள் ளலாம்” என கூறப்பட்டு உள்ளது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகள் புறக்கணிப்பு
குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
தஞ்சாவூர், ஜூலை 26- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை யில் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ள தாகக் கூறி குறைதீர்க்கும் நாள் கூட்டத் திலிருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன், வேளாண்மைத் துறை, கூட்டுற வுத்துறை, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து விவசாயிகள் தென்னங்கன்று, ரோஜாச் செடி, சாக் லெட் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமி ழக விவசாயிகளின் நலன்கள், விவசா யத் தொழிலாளர்களின் நலன்கள், கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டதாக கூறி விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கூட்டத்தி லிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்ட அரங்குக்கு மீண்டும் வந்து தங்களது கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசுகையில், “தஞ்சாவூர் மாவட் டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்கப்பட்டது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் சாகுபடி பாதிக் கப்பட்ட நிலையில், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் அவ திப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு அந்த பயிர்க் கடனை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும். விவசாய மின் இணைப்புக்கு பணம் செலுத்தியும், காத்திருக்கும் விவசாயி களுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆலமரம் முளைத்ததால், மேற்கூரை சேதமாகியது. இதனால் அண்மையில் பெய்த மழையில் 2,500 மூட்டை சர்க்கரை மழைநீரில் நனைந்து சேத மானது. எனவே உடனடியாக சர்க்கரை மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தால், செங்கிப்பட்டி பகுதிகளில் உள்ள 660 ஏரி, குளங்களில் நிரப்ப நட வடிக்கை எடுக்க வேண்டும். நீர்வள ஆதாரத் துறையில் காலி யாக உள்ள லஸ்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருவோணம் பகுதி யில் முறைகேடாக மனைப் பகுதிகளை விளைநிலங்களாக பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடிக் கான இடத்தை கிராம நிர்வாக அலுவ லரின் பெயரில் போலி கையெழுத் திட்டு தனியாருக்கு பட்டா போட்டு வழங்கியது குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளி டம் ஆறு ஏராளமான கிராமப்புறங்கள், நகரங்களுக்கு குடிநீரின் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே, இந்த ஆற்றில் மணல் குவாரிகள் நடத்த எந்த காலத்திலும் அனுமதிக்க கூடாது. கொள் ளிடம் ஆற்றில் நீரை செறிவூட்டும் வித மாக வாழ்க்கை-தூத்தூர் இடையே கத வணை அமைக்க வேண்டும். திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வங்கி யில் வாங்கிய கடன் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பட்டுக் கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக் காக இரண்டாக பிரிக்க வேண்டும்” உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தினர். இந்த கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரும், துறை சார்ந்த அதிகாரி களும் அவ்வப்போது பதிலளித்தனர்.
ஓட்டுநர் உரிமம் பெற ரூ.1200 லஞ்சம்: வாகன ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை
கும்பகோணம், ஜூலை 26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த 2008 டிசம்பர் 26 அன்று கும்பகோணத்தில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்த ஸ்ரீதர் என்பவர் மணிகண்டன், ஹாஜாசலீம், சந்திரமோகன், பிரித்திவிராஜ் ஆகிய நால்வருக்கும் டிரைவிங் லைசென்ஸ் பெற கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலு வலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் உரிமம் பெற, ஒரு நபருக்கு ரூ.300 வீதம் நால்வருக்கும் ரூ.1200 வேண்டுமென மோட்டார் வாகன ஆய்வாளர் காஞ்சி (48) லஞ்சமாக கேட்டதாகவும் அந்த பணத்தை புரோக்கர் மூர்த்தியிடம் கொடுக்க கூறியுள்ளார். அப்போது புரோக்கர் மூர்த்தியும் மோட்டார் வாகன ஆய் வாளர் காஞ்சியும் கையும் களவுமாக பிடிபட்டனர். பின்னர், 2008 டிசம்பர் 28 அன்று தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையில், மறைந்திருந்த மோட்டார் ஆய்வாளர் காஞ்சி மற்றும் புரோக்கர் மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற அடைப்பு காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கானது கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் காஞ்சி 2018 ஜூன் 30 அன்று ஓய்வுபெற இருந்த சமயத்தில், வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தது. அதனால் அவர் ஓய்வுபெற அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதி மன்ற நடுவர் சண்முகப்பிரியா இந்த வழக்கை விசாரித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் காஞ்சி (தற்போதைய வயது 66) என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும், ரூ.4000 அபராதமும், அதை கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை, மேலும் ஓராண்டு சிறை தண்டனை, அபராதம் ரூ.1000 கட்ட வேண்டும். இதில் தவறும்பட்சத்தில், மேலும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் 2 ஆவது குற்றவாளி யான புரோக்கர் மூர்த்தி இறந்துவிட்டார்.
திருத்துறைப்பூண்டி காய்கறி சந்தையில் விலை பட்டியல் பலகை இல்லை பொதுமக்கள் அவதி
திருத்துறைப்பூண்டி, ஜூலை 26- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில், கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் தினசரி காய்கறி அங்காடி வளாகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு நாட்களும் காய்கறி களின் விலை என்ன என்பது குறித்த விலைப் பட்டியல் பெயர் பலகை இல்லை. ஒவ்வொரு கடைகளிலும் வெவ்வேறு விலைகளில் காய்கறிகளை விற்பனை செய்வதால், சரியாக விலையை தெரிந்து கொள்ள முடியாமல், பொதுமக்கள் அவதிப்படு கின்றனர். உழவர் சந்தையில் காய்கறிகளின் விலைப் பட்டியல் பெயர் பலகை இருந்தும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். டெல்டா மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் இல்லாத தால், விவசாயக் கூலித் தொழிலாளர்களே அதிகமாக வாழ்கின்றனர். எனவே, தினசரி நிர்ணயிக்கப்படும் விலையை உறுதிசெய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழி காட்டுதலை அங்காடிகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கூரில் மக்களுடன் முதல்வர் முகாம் மயிலாடுதுறை, ஜூலை 26 - மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வியாழனன்று நடை பெற்றது. முகாமில் 436-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப் பட்டன. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர், கிடங்கல், மாமாக்குடி, மருதம்பள்ளம், மடப்புரம், காலம நல்லூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொது மக்களுக்கான மக்க ளுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் ஆக்கூரில் நடை பெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிநீர், சொத்து வரி, வீட்டு மனை பட்டா, முதி யோர் உதவித்தொகை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை ஆகிய துறைகளின் 15 வகையான சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெறும் வகையில், துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. இதில் சுமார் 436 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
தைல மரங்களை முற்றிலுமாக அழிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜூலை 26 - நிலத்தடி நீரை பாழ்படுத்தும் தைல மரக்காடுகளை முற்றிலுமாக அழிக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுசாமி முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு: அரிமளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு வனப் பகுதிகளிலும், தனியா ருக்குச் சொந்தமான இடங்களிலும் அளவுக்கு அதிகமாக தைலமரக் காடுகள் பயிரிடப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. மேலும், இயற்கை காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர் பெருக்கமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, தைல மரக்காடுகளை முற்றிலுமாக அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் உயர்மின் கோபுர டவர் செல்வதற்காக வழித்தடம் அமைக்கப்பட்டது. இதனால் ஏராளமான தென்னை மரங்கள் வெட்டப்பட்ட நிலை யில் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒரு தென்னை மரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் மின்சார வாரியத்திலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். விராலிமலை ஒன்றியம் தொண்டைமான் நல்லூர் கிராமத்தில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயி களுக்கு மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்ற னர். இவர்களுக்கு சிறப்பு அனுமதி பெற்று விரைவாக மின் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொன்னுசாமி பேசினார்.
குறுவை தொகுப்பு திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களையக் கோரிக்கை
திருவாரூர், ஜூலை 26 - திருவாரூரில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உள்ள முரண்பாடு களை களைய வலியுறுத்தி விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன் தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட் டுள்ள குறுவை தொகுப்பில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து தமிழக அரசிடம் தெரிவிப்பதாக பதில் அளித்ததைத் தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத் தில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.