districts

img

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை

வேதாரண்யம்,  பிப்.13 - பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வலி யுறுத்தி வேதாரண்யம்  அருகே துளசியாப்பட்டினத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கடைத்தெருவில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகு திக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். குளங் களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் கிளைச் செயலாளர் சேகர், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி. அம்பிகாபதி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.எஸ். பன்னீர்செல்வம், ஏ.வேணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில், 10 நாட் களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரி விக்கப்பட்டது. இதை யடுத்து, போராட்டம் தற் காலிகமாக விலக்கிக் கொள் ளப்பட்டது.