திருப்பூர், ஜூலை 1- சாமளாபுரம் ஊராட்சியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி விட்டு, சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங் களன்று மனு அளித்துள்ளனர். இது குறித்து சாமளாபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று அளித்த மனுவில், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் சாலை களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது குறித்து சாம ளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலரி டம் தகவல் அளித்தும், எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. பட்டியலின மக் கள் வாழும் பகுதி என்பதால் புறக்க ணிக்க படுகிறோமோ என்று தோன்றுகி றது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சில மாதங்களுக்கு முன்பு சாமளாபுரம் பேரூராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர். மேலும், சாலை அமைக்கும் முன்பே சாக்கடை வசதி யும் செய்து விடுவதாக உத்தரவாதம் அளித்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி சாக்கடை வசதிகளுக்கான எந்த பணியும் செய்யாமல், அவசர அவசரமாக சாலைப் பணியை மட்டும் மேற்கொண்டனர். இதனால் மீண்டும் சாக்கடைப் பணிக்காக சாலையைத் தோண்டும் நிலை ஏற்படும். எனவே சாலை போடும் பணியை நிறுத்திவிட்டு, சாக்கடை கட்டி முடித்த பின்பு சாலைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.