districts

img

களப்பால் தென்பறை- ராதாநரசிம்மபுரம்- மன்னார்குடி இடையே பேருந்து இயக்கக் கோரிக்கை

கோட்டூர், டிச2- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய சிறப்புப் பேரவை கோட்டூரில் நடைபெற்றது  இதில்  திருத்து றைப்பூண்டியில் இருந்து களப்பால், தென்பரை, ராதா  நரசிம்மபுரம், வழியாக மன்னார் குடி வரை பேருந்து இயக்க வேண்டுமென தீர்மானம் நிறை வேற்றப்பட்டது   ஒன்றிய செயலாளர் எம்  சதீஷ் தலைமையில் வாலிபர் ச்ங்க நிர்வாகிகள் திருத்துறை பூண்டி அரசுப் போக்குவரத்து உதவி பொறியாளர் கே. அம்பேத் கரிடம் மனு அளித்தனர்.  கோரிக் கை மனுவை பெற்றுக்கொண்ட துணைப் பொறியாளர் அம்பேத் கர்  தென்பறை கிராமத்தின் சாலை  வசதியை பார்வையிட்டு பேருந்து  இயக்குவதற்கான நடவடிக்கை களை எடுப்பதாக உறுதிய ளித்தார்.   இந்நிகழ்வில் மாவட்ட பொரு ளாளர் ஏகே வேலவன், ஒன்றியப் பொருளாளர் கலைவாணன், ஒன்றியத் துணைத்தலைவர் விக்னேஷ், ஒன்றியத் துணைச் செயலாளர் காளிமுத்து, ஆர். ஆவணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஜே.சேகர் தென்பரை அருள்ராஜ், கோபி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.