திருவாரூர், பிப்.21- திருவாரூர் மாவட்ட நூலகத்திற்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்தி ருப்பதாவது: திருவாரூர் மாவட்ட மைய நூல கத்தை ஏழை, எளிய மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் நாள்தோறும் இங்கு வந்து படித்து செல்கின்றனர். தற்போது வாசகர்கள் நூல கத்திற்கு வந்து செல்ல முடியாத அள விற்கு சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. நூலகத்தில் கழிவறை, மின்விளக்கு, குடிநீர் வசதிகளில் குறைபாடு உள்ளது. கட்டிடத்தில் மேல் பகுதியில் மாவட்ட நுல கர்களுக்கான அலுவலகம் செயல்படு கிறது.வாசகர்கள் அமர்ந்து படிக்கும் இட வசதி குறைந்த அளவில் உள்ளது. இத னால் போட்டி தேர்வர்கள் வெளியில் அமர்ந்து படித்து வரும் நிலையும் உள்ளது. எனவே கூடுதல் இடவசதிகளை ஏற் படுத்தித் தர வேண்டும், மாவட்ட நூலகர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களும் உள் ளன. தமிழ்நாடு முதல்வர் திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தை சீரமைத்து மேலும் தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.