சின்னாளப்பட்டி, ஜன.30- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே மாலையகவுண் டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட் டிக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இக்கிராம மக்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் தற்போது இடிந்து விழுந்து மிக வும் மோசமான நிலையில் உள்ளது. 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பழுதடைந்த குடிசை, ஓட்டு வீடு மற்றும் ஆஸ்பட்டாஸ் வீடுகளில் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். இத னால் தமிழக அரசால் கட்டிக் கொடுக் கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு மரா மத்து பணிகளுக்காக நிதி வழங்கு வதைப்போல் இடிந்துள்ள தங்களது வீடுகளுக்கும் உரிய முறையிலான நிதி வழங்கி உதவும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி குடியிருப்பு வாசி முருகன் கூறுகையில், கூலித் தொழிலாளர்கள் நிறைந்த எங்களது கிராமத்தில் போதிய வருமானம் இல்லாததால் தற்போது 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் பக்கசுவர்கள், மேற் கூரைகள், தரைளம் உட்பட பலவீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள வீட்டில்தான் குழந்தைகள் முதல் முதி யவர்கள் வசித்து வருகிறோம். மேலும் கடந்த மாதம் வரை பெய்த கடுமை யான தொடர் மழை மற்றும் பனிபொழி வால் பல குடும்பங்கள் ஊர் சாவடி, பள்ளிகூடம், நாடகமேடை, கோவில் களில் தங்கி உயிர் தப்பினோம். இருப்பி னும் பலருக்கு மழைக்கால தொற்று நோய்கள் ஏற்பட்டு இன்றுவரை சிகி ச்சை பெற்று வருகிறோம். எனவே தமி ழக அரசும் மாவட்ட நிர்வாகமும் எங்க ளது கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி உரிய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து வீட்டை மராமத்து செய்ய நிதி வழங்கி உதவுமாறு கிராம மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக கூறினார்.