மயிலாடுதுறை, ஜன.6- மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோயில் அரு கேயுள்ள கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயி லில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர் துறை சார்பில் கடந்த 2022 வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட் டாட்சியர் அர்ச்சனா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் நிவாரணத் திற்கான ஆணை மற்றும் விவசாய உபகரணங்களை வழங்கினார்.