districts

திருச்சி முக்கிய செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.83 லட்சம் விடுவிப்பு 

தஞ்சாவூர், மார்ச் 31-  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தஞ்சை மாவட்டத் தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24  மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு, 72 பறக்கும் படை,  24 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற  தொகுதிகளில், சனிக்கிழமை பறக்கும் படை குழு சோதனை  செய்தபோது, கனரக வாகனங்களில் கொண்டு செல்லப் பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், ரூ.78,800 மற்றும் ரூ.54,500 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக் கப்பட்டது.  இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப் பட்டதையடுத்து, மேல்முறையீட்டு குழுவால் ஆய்வு  செய்யப்பட்டு, மொத்தப் பணம் ரூ.2,83,300 விடுவிக்கப்பட் டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்து உள்ளார். 

பட்டீஸ்வரத்தில் ரூ.2.37 லட்சம் பறிமுதல்

பாபநாசம், மார்ச் 31 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பட்டீஸ்வரம் கடைவீதியில் பறக்கும் படையினர் தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த்  என்பவரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் ரூ.2,37,525 பணம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாத தால் பறக்கும் படையினர் அதைக் கைப்பற்றினர். அந்தப் பணம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணி கண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை, மார்ச் 31 - புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் இல்லம் தேடிக் கல்வி  மையத்தில் புவி வெப்பம டைதல் குறித்த கருத்த ரங்கம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இல்லம்தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா உரையாற்றினார். முன்ன தாக தன்னார்வலர் சுமதி வரவேற்க, சரண்யா நன்றி கூறினார்.

ரத்த தான முகாம்

பொன்னமராவதி, மார்ச் 31- புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியில் சிவகங்கை அரசு மருத்து வக் கல்லூரியின் வீ. புதூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையம் மற்றும் பொன்னமராவதி லயன்ஸ் சங்கம் சார்பில் லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளா கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் 52 யூனிட் ரத்தம் தன்னார்வலர் களால் வழங்கப்பட்டது. இதில் லயன் சங்கங்க ளின் நிர்வாகிகள், ஆதி காலத்து அலங்கார மாளிகை, சிவந்தி சில்க் வணிக நிறுவனத்தினர், முத்தமிழ் பாசறை, பொன் னமராவதி வர்த்தக கழ கத்தினர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை லயன் சங்க தலைவர் கருப் பையா, செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

ரோட்டரி சங்கங்களுக்கு இறகுப்பந்து போட்டி

பாபநாசம், மார்ச் 31- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் தஞ்சாவூர், கும்பகோணத்தில் இயங்கி வரும் ரோட்டரி சங்கங் களுக்கான இறகுப்பந்து போட்டி நடந்தது.  பசுபதிகோயிலில் நடந்தப் போட்டி யில் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி  சங்கம் முதலிடத்தையும், அதற்கடுத்த 3  இடங்களை கும்பகோணத்தைச் சேர்ந்த  3 ரோட்டரி சங்கங்களும் பெற்றன. வெற்றி பெற்ற சங்கங்களுக்கு, சிறந்த  விருந்தினர் லியோன் வெற்றிக் கோப் பையை வழங்கினார். அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் சுப்ர மணியன், பொருளாளர் சங்கர், முன்னாள்  உதவி ஆளுநர்கள் காதர் பாட்ஷா, சர வணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர், மார்ச் 31-  2024 ஜூன், ஜூலை மாதத்தில் நடை பெற உள்ள தொடக்கக் கல்வி பட்ட யத் தேர்விற்கு, தனித் தேர்வர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.  இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோ. கலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  கூறியிருப்பதாவது: தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப் பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை  பூர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண்  சான்றிதழ்களின் அனைத்து நகல்களை யும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.  அதனை தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத் தில் அமைந்துள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயி லாக, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேதி களில் விண்ணப்பிக்க வேண்டும்.  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா  பொருத்தப்பட்டுள்ளதால், அந்நிறுவ னங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய  விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து,  தேர்வு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  தேர்வு கட்டண விவரம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றி தழ் (முதலாம் ஆண்டு) ரூ.100, மதிப்பெண்  சான்றிதழ் (இரண்டாம் ஆண்டு) ரூ.100,  பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 ஆகும்.  தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பங் கள் சமர்ப்பிக்க வேண்டிய நாட்கள் 1.4. 2024 பிற்பகல் முதல் 6.4.2024 வரை. சிறப்பு அனுமதி திட்டம் (தட்கல்)  1.4.2024 முதல் 6.4.2024 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர் வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ஏப்.8 மற்றும் 10 தேதிகளில், சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000  செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப் பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி யாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப் பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காவல்துறை அணிவகுப்பு
 

அறந்தாங்கி, மார்ச் 31 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் ஞாயிறன்று காவல்துறை யின் சார்பாக அணிவகுப்பு பேரணி நடை பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையி லும் நடைபெற்ற பேரணிக்கு, அறந்தாங்கி  காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணா கரன் முன்னிலை வகித்தார். பேரணியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்  பேரணியானது, அறந்தாங்கி செக் போஸ்ட்டில் தொடங்கி எம்ஜிஆர் சிலை,  அண்ணா சிலை, காமராஜர் சிலை போன்ற முக்கிய வீதி வழியாக சென்று அறந்தாங்கி பேருந்து நிலையம் வந்த டைந்தது.

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

பாபநாசம், மார்ச் 31 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட் டூர் அருகே கொத்தங்குடி, உதாரமங்கலம் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, பள்ளித் தலைமை ஆசிரி யர் பெஞ்சமின் ஜெரால்டு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதேபோன்று எடக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக் கப் பள்ளியில் நடந்த ஆண்டு  விழாவில் ஊராட்சித் தலைவர் பழனி, பள்ளி தலைமையா சிரியர் ஜாக்குலின் லில்லி  மேரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படும்  பறக்கும் படை, கண்காணிப்பு அலுவலர்கள்

தஞ்சாவூர், மார்ச் 31-  தேர்தல் காலத்தில் கருப்புப் பணப் புழக்கத்தினை கட்டுப்படுத்தவும், வாக்கா ளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கு வதை தடுத்திடவும், இந்நோக்கத்திற்காக கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட் களை பறிமுதல் செய்திடவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தினை கண் காணித்திடவும் பறக்கும் படைகள், நிலை யான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் படுகின்றன. பறக்கும்படை, நிலையான கண்கா ணிப்பு குழு அலுவலர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி நடுநிலையுடன் செயல்பட கீழ்க்காணும் நடவடிக்கைகளை, முடிவு களை தேர்தல் ஆணையம் எடுத்திட வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.  ஒரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலுவ லகங்களில் பணிபுரியும் அலுவலர்களை அதே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களுக்கு பறக்கும் படை, நிலையான கண்கா ணிப்புக் குழு அலுவலர்களாக நியமித்திட கூடாது. வேறு சட்டமன்றத் தொகுதிக்கு, அந்த  அலுவலர்கள் இதுவரை பணிபுரியாத தொகு திக்கு, பகுதிகளுக்கு பறக்கும் படை, நிலை யான கண்காணிப்புக் குழு அலுவலராக நியமித்திட வேண்டும். 8 மணிநேரப் பணியினை 6 மணி நேர மாக குறைத்து சுழற்சி முறையில் 4 குழுக் களை நியமித்திட வேண்டும். தேர்தல் அறி விப்பிலிருந்து வாக்குப் பதிவு நாள் வரை  தொடர்ந்து ஒரே அலுவலரை, குறிப்பிட்ட அலு வலர்களை பறக்கும் படை, நிலையான கண் காணிப்புக் குழு அலுவலர்களாக பணிபுரிய வைப்பதை தவிர்த்து, 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அலுவலர்களை மாற்றம் செய்து புதிய அலுவலர்களை நிய மித்திட வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களில் பணி புரிந்த அலுவலர்களுக்கு பழிவாங்கும் பணி யிட மாறுதல்கள், அச்சுறுத்தல்கள் நிகழா மல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி  செய்திட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது..

கொரோனா காலத்தில் கூட எந்த நிவாரணமும் அளிக்காத மோடி அரசு சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பேச்சு

பழனி, மார்ச் 31- பழனி மற்றும் ஒன்றிய பகுதிகளில் வெள்ளியன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட  திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம் வாக்காளர்களிடையே பேசுகை யில், ‘‘பள்ளிகளிலே தேசிய புதிய கல்விக்  கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்  டத்தை புறக்கணித்து விட்டு இந்திய அர சியல் சாசனத்தையே கேலிக்குள்ளாக்கி வருகின்றனர்’’ என்று விமர்சித்தார்.  ‘‘நாட்டில் மிகப்பெரிய பணக்காரர் களான அதானி, அம்பானிகளுக்கெல்லாம் வரிச் சலுகைகளை அறிவித்து வருகிற இந்த பாஜக ஒன்றிய அரசு ஏழை மாணவ, மாணவியர்களின் கல்விக்கடனை ரத்து செய்யாமல் கந்து வட்டிக் கடைக்காரன்  போல் வசூலித்து வருகிறது. தேர்தல் பத்தி ரத்தில் மோடி செய்த ஊழல் அம்பலமாகி யுள்ளது. இப்படி நாடு முழுவதும் பல ஆயி ரம் கோடி ரூபாயை ஊழல் செய்து சேர்த்தி ருக்கிறது பாஜக என்று வெட்ட வெளிச்ச மாகியுள்ளது.  கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்காத  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு. தடுப்பூசி போடுவதற்குக் கூட எதிர்க்  கட்சிகள் கோரிக்கை வைக்க வேண்டி யிருந்தது. சட்டமன்ற தேர்தலில் கொரோனா  கால நிவாரணம் ரூ.4 ஆயிரம் வழங்கு வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்  னது திமுக, அதை ஆட்சி பொறுப்பேற்ற தும் வழங்கியது. ஆனால் மோடி அரசோ  மணி அடிக்கவும், விளக்கை ஏற்றவும் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது. வெள்ளச் சேதம் ஏற்பட்ட போது தமிழக  அரசு கேட்ட நிவாரண நிதியை வழங்கா மல், இன்றைக்கு தேர்தல் வந்ததும் தமிழ் நாட்டுக்குள் வெறுங்கையுடன் வந்து வெட்டி பேச்சு பேசிவிட்டு செல்கிறார் மோடி’’ என்று பேசினார்.