தஞ்சாவூர், பிப்.10- தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட மகர்நோன் புச்சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ் (64). இவருக்கு 2021 ஆம் ஆண்டு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயி னால் அவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர். தேவதாஸ் அப்போது முதல் ஒரே காலுடன் நடமாட்டம் இல்லாமல், படுத்த படுக்கையி லேயே மன வேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில் 2023 ஜூலை மாதம் பெண் சுகா தார தன்னார்வலர் பவானி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை தேவதாஸ் வீட்டிற்கு கொண்டு சென்றபோது, அவரது நிலை குறித்து இயன்முறை மருத்துவர் கி.கோகுலிடம் தெரிவித்தார். இதனையறிந்த இயன்முறை மருத்துவர் கோகுல், மக்களைத் தேடி மருத்துவ திட்ட சிகிச்சை காரில் தேவதாஸ் வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில், 3 ஆண்டுகள் நடமாட்டம் இல்லாமல் படுக்கை யில் இருந்ததால் தேவதாசுக்கு இடதுகால் மற்றும் இடுப்பு தசைகளில் பலவீனம் இருப்பதை கண்டறிந்தனர். பின்பு, அதனை சரிசெய்ய இயன் முறை பயிற்சி நெறிமுறையை வடிவமைத்தார். அந்நெறிமுறையில் தசை மற்றும் மூட்டு வலுவடைய 5 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி வழங்கியதால், தேவதாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்து தான் வசிக்கும் தெருவில் நடக்க தொடங்கி னார். மேலும், அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாநக ராட்சி ஆணையாளர் இரா.மகேஸ்வரி உத்தர வின்படி, தேவதாசுக்கு செயற்கைக் கால் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ் காந்தி வெள்ளிக்கிழமை தேவதாஸ் வீட்டிற்கு சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந் தார். மேலும், அவருக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொண்ட இயன்முறை மருத்துவர் கோகு லுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மருத்துவர் கோகுலின் இயன்முறை பயிற்சி யும், மக்களைத் தேடி மருத்துவ திட்டமுமே தற்போது நான் நலமுடன் நடமாடுவதற்கு உதவி யாக இருந்ததாக தெரிவித்தார் தேவதாஸ்.