புதுக்கோட்டை, ஜூன் 16-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத் தில் பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளை கண்ட றிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கந்தர்வ கோட்டை வட்டார வளமையத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்க டேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர் களிடம் தமிழக அரசு கல்விக்கு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்து வது என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பிரான்சிஸ், வருவாய் துணை வட்டாட்சியர் பால்பாண்டி, வட்டார மருத்துவ அலு வலர் நவீன், வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் நிர்மலா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.