districts

img

ஆக்கூர் நவீன அரிசி ஆலையை மீண்டும் துவக்கிட வேண்டும்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.25- மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூரில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணி பக்கழகத்தின் கீழ் இயங்கி  வந்த நவீன அரிசி ஆலை  கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி செயல்  படாமல் மூடப்பட்டுள்ளது.  இந்த ஆலைக்கான கட்டு மான பணியை துவக்கிடக் கோரியும், உள்ளூர் வேலை யாட்களை பணியமர்த்திட வேண்டுமென்றும், இங்கி ருந்து மாற்றப்பட்ட சிவில் சப்ளை கிடங்கினை மீண்டும் ஆலை வளாகத்திலேயே துவங்கிடக் கோரியும் ஆக்  கூர் கடைவீதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கட்சியின் செம்பனார் கோவில் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ் தலைமை  வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தை தொட ர்ந்து ஆக்கூர் கடைவீதியிலி ருந்து கோரிக்கைகளை முழங்கியவாறு பேரணியாக சென்று அரிசி ஆலை முன்பு சென்று போராட்டத்தில் ஈடு பட்டனர்.