districts

img

தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பு: சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.18 - பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பிருந்த போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக அறிவிக்க கூடாது. முன்பணம் மற்றும் நிலுவையில் உள்ள பணப் பயன்களுக்கான நிதிகளை விடுவிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர் மாவட்டக் குழு போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிப கழகம், ஆவின் சங்கங்கள் சார்பில் திங்களன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிஐடியு மணிமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத்தலைவர் நடராஜன், நுகர்பொருள் வாணிப கழக தலைவர் ராசப்பன் ஆகியோர் பேசினர். மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

;