districts

img

பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை

மயிலாடுதுறை, ஏப்.22-

   உலகம் முழுவதும் சனிக்கிழமையன்று  ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல்வேறு  இடங்களில்  இஸ்லாமியர்கள் சிறப்பு தொழு கையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலும் உள்ள  பள்ளிவாசல் களில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமி யர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாச லில் இமாம் ஜமாலுதீன் பாக்கவி தலைமை யில் ரமலான் திருநாளை முன்னிட்டு ஏராளமான  இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

  பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம லான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.  திமுக ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக்,  முத்தவல்லி பஷீர் அகமது, செயலாளர் நூருல்லா, பொருளாளர் ரகுமான், ஜமாத்தார் கள் உள்ளிட்டோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

   இதேபோல் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், நீடூர், வடகரை, அரங்கக்குடி, ஆக்கூர் தரங்கம்பாடி, திருக் களாச்சேரி, சங்கரன்பந்தல், வடகரை உள்ளிட்ட  பள்ளிவாசல்களில் ஏராளமானோர் தொழுகை களில் கலந்து கொண்டனர்.

   நாகப்பட்டினம்

   நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் புனித ரமலானை முன்னிட்டு சிறப்பு தொழுகை சனிக்கிழமையன்று நடைபெற்றது. சிறப்பு தொழுகையை முன்னிட்டு நாகூர் தர்கா அறங் காவலர் டிரஸ்ட் சார்பில் விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு தொழுகை யில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் ஈடு பட்டனர்.  

கும்பகோணம்

   கும்பகோணத்தில் உள்ள அனைத்து இஸ் லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம், பெரிய பள்ளி வாசல், அரக்காசியம்மாள் பள்ளிவாசல், ஹாஜி யார் பள்ளிவாசல் உள்பட ஏழு ஜமாத்துகள் சிறப்பு ரமலான் தொழுகை நடைபெற்றது.

   சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் அனைத்து  சமூக மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகை நிகழ்ச்சிக்கு  பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.  

   இதே போன்று சாந்தி நகர் திடல், மேலக்கா வேரி, ஆடுதுறை, அவனியாபுரம், திருநாகேஸ் வரம், திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், தத்து வாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், சோழபுரம் என பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை கள் நடைபெற்றன.