districts

செங்கொடியேற்றி உற்சாகம்கொண்டாட்டம்

தொழிலாளர்களின் உரிமை முழக்கப் பேரணி

    புதுக்கோட்டை, மே 1-  புதுக்கோட்டையில் தொழிலா ளர் தினமான மே தினத்தை முன்  னிட்டு சிஐடியு, ஏஐடியுசி தொழிற்  சங்கங்களின் சார்பில் தொழிலா ளர்களின் உரிமை முழக்கப் பேரணி திங்கள்கிழமை எழுச்சியு டன் நடைபெற்றது.

   புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்  பட்ட தொழிலாளர்களின் செம் படைப் பேரணி தெற்கு 4-ஆம் வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின்  முக்கிய வீதிகள் வழியாக பொதுக்  கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது.

   சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ.அரசப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இரண்டு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், ப.ஜீவா னந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், ஏஐடியுசி சார்பில் திருத்  துறைப்பூண்டி எம்எல்ஏ மாரி முத்து, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோ டன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.

  சிஐடியு மாநிலச் செயலாளர்  எஸ்.தேவமணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணி யன், சி.அன்புமணவாளன், சி. மாரிக் கண்ணு, க.ரெத்தினவேல், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.தர்மராஜன், ஏ.ராஜேந்தி ரன், வி.சிங்கமுத்து உள்ளிட்டோர் பேசினர். பேரணி-பொதுக்கூட்டத் தல் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி, மே 1-

  8 மணி நேரம் வேலை 8 மணி நேரம் உறக்கம்  8 மணி நேரம் ஓய்வு கேட்டுப் போராடி வென்ற  உழைப்பாளர்கள் தினமான மே தினம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது.  

  இதனொரு பகுதியாக திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்று விழாவிற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா தலைமை வகித்து  கொடி ஏற்றினார்.

  சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் காந்தி  மார்க்கெட், ஸ்ரீரங்கம், ஏர்போர்ட், ஆவின் நிறு வனம், காட்டூர் பகுதி, மத்திய பேருந்து நிலையம்,  சத்திரம் பேருந்து நிலையம்,  ஆட்டோ, கட்டு மானம், துரைகடை, சுமைப்பணி, போக்குவரத்து  டெப்போ, மின்வாரிய அலுவலகங்கள் உட்பட திருச்சி மாநகரில் 204 இடங்களில் சிஐடியு கொடி ஏற்றப்பட்டது.  

  விழாவிற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்டத் தலைவர் சீனிவாசன். பொருளாளர் மணி கண்டன், சுமைப்பணி மாவட்டச் செயலாளர் சிவ குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிபிஎம் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச் செல்வன், லெனின் ஆகியோர் ஏற்றினர்.  

  வாலிபர் சங்க புத்தனாம்பட்டி கிளை சார்பில்  சங்க கொடியை சத்தியராஜ் ஏற்றினார். இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாவட்டப் பொரு ளாளர் ஆணைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  தா.பேட்டை ஒன்றியத்தில் சிபிஎம் சார்பில் தா.பேட்டை கடைவீதி, பேருந்து நிறுத்தம், பில்லாதுறை, கரிகாலி, மேட்டுப்பாளையம், கோடங்கிபட்டி, கோதூர்பட்டி, மங்களம், துளை யாநத்தம், ஜம்புநாதபுரம், ஊரகரை, பெருக னூர், பாப்பாபட்டி, சேருகுடி, கோணப்பம்பட்டி ஆகிய ஊர்களில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.

  மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்வில் மூத்த தோழர் டி.எம்.ஜக்கரியாவின் இல்லத்தில்  அவருடைய பேத்தி ஆசிபா மே தின கொடியை ஏற்றினார். இதில், மணப்பாறை தாலுகா செயலா ளர் கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   சிபிஎம் லால்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் சிஐடியு கொடியை ஏற்றி னார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் மாந்துறை பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றினார். சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் சம்பத்,  புறநகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல் வம் ஆகியோர் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கொடியேற்றினர். இதில் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

புதுக்கோட்டை

   சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலு வலகத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் கட்சிக்கொடி ஏற்றினார்.

   புதுக் கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டோ நிலை யத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் சிஐடியு கொடியேற்றி னார்.  

   கந்தர்வகோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ சிஐடியு கொடியேற்றினார்.  

   அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் சிஐடியு கொடியேற்றினார்.

    அறந்தாங்கி நகராட்சி, உள்ளாட்சி துறை தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் சிஐ டியு மாணிக்கம் தலைமையில், ஒன்றியச் செய லாளர் தென்றல் கருப்பையா முன்னிலையில், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மேதின கொடியை ஏற்றினார்.  

    பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற நிகழ்விற்கு சிஐடியு கிளைத் தலை வர் சாத்தையா தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பகுருதீன் செங்கொடியை  ஏற்றினார்.  

    மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு நிர்வாகிகள் ஜெயக்குமார் தலைமையில் செல்வ ராசு, அரசு போக்குவரத்து கழக கிளை முன்பு சிஐ டியு கிளைச் செயலாளர் பாலமுருகன், காரை யூரில் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் சௌந்த ரராஜன், உடையாம்பட்டியில் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராமசாமி ஆகியோர் செங் கொடிகளை ஏற்றி வைத்தனர்.

நாகப்பட்டினம்

   சிபிஎம் நாகை மாவட்டக் குழு அலுவலகத் தில் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து செங்  கொடியை ஏற்றி வைத்தார். கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான வி.பி. நாகைமாலி பங்கேற்றார்.

மயிலாடுதுறை

  மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலகம், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்.  

   திருக்கடையூரில் தரங்கம்பாடி ஒன்றிய அலுவலகம் மற்றும் இலுப்பூர்,சங்கரன்பந்தல், நல்லாடை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்க ளில் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலை மையிலும், அபிஷேகக்கட்டளை, பி.பி.நல்லூர்,  ஆணைக்கோயில் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட  இடங்களில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 தஞ்சாவூர்

   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முழு வதும் 53 இடங்களில் சிஐடியு மற்றும் சிபிஎம் செங்கொடி ஏற்றப்பட்டது.

   நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகரச் செயலா ளர் செந்தில்குமார், சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், சாலை போக்குவரத்து சம்மேளன மாநிலச் செயலாளர் பார்த்தசாரதி, மாமன்ற உறுப்பினர் செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   பாபநாசம் ஒன்றியக் குழு சார்பில் கட்சி அலு வலகம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வில், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளி தரன், மாவட்டக் குழு காதர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.

   திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய சிபிஎம்,  சிஐடியு, விவசாய, விவசாயத் தொழிலாளர், ஆட்டோ, குத்துவிளக்கு லேத் சங்கங்கள் சார்பில்  50 இடங்களில் மேதினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், ஒன்றியச் செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

   திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, ஒன்றியச் செயலா ளர் (பொ) ஏ.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து  கொண்டு செங்கொடி ஏற்றினர்.

    தஞ்சாவூர் கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின கொடியை  மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஏற்றி  வைத்தார். சிஐடியு கொடியை மூத்த தோழர் என்.சீனிவாசன் ஏற்றி வைத்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சரவணன், மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   பேராவூரணி கடைவீதியில் மேதினக் கொடி யேற்று விழா மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எம்.இந்து மதி, ஒன்றியச் செயலாளர் கொன்றை வே. ரெங்கசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

   பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம்,  விரைவு போக்குவரத்து கழகம், பேருந்து நிலை யம், கரிக்காடு உள்ளிட்ட 37 இடங்களில் கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கொண்டிகுளத்தில் கட்டு மான தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என். பேர் நீதி ஆழ்வார், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி,  அனைத்து தொழிற்சங்க தலைவர் ரெ.ஞானசூரி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.