districts

img

ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 29-  ராகுல்காந்தியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்தும், பாஜக ஒன்றிய அரசின் ஜன நாயக படுகொலையை கண்டித்தும் மயிலாடுதுறை யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்  குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் கண்டன உரை யாற்றினார். மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மற்றும் வாலிபர், மாதர், மாணவர் சங்க  நிர்வாகிகள் கலந்துகொண்ட னர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அன்பு. வே.வீரமணி, நகர காங்கி ரஸ் தலைவர் வி.கே.எஸ். அருள் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் செல்வமணி, திக மாவட்ட துணைத் தலைவர் அருண்  காந்தி, மக்கள் அதிகாரம்  மண்டல ஒருங்கிணைப்பா ளர் த.சண்முகசுந்தரம், விசிக செய்தி தொடர்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.