பெரம்பலூர், பிப்.3 - பெரம்பலூர் மாவட்டம் தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் ஜன.20 முதல் மார்ச் 9 வரை வாரம்தோறும் சனிக்கிழமை தோறும் மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பிப்.3 அன்று நடைபெற்ற 3 ஆவது வார பயிற்சி வகுப்பிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் கே.எம்.சக்திவேல் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அறிவழகன் வரவேற்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார். கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.