முசிறி, டிச.27- திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த திருத்தியமலை ஏரிக்கு பாதை அமைத்து விவசாயத்தை பாதுகாக்க கோரி கோட் டாட்சியர் மாதவனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால் இன்று வரை தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடிய வில்லை. போர் அமைத்தாலும் நீரின் மட்டம் உயரவில்லை. இதனால், தண்ணீர் கிடைக் காமல், விவசாயம் செய்வதற்கு வழி யின்றி இருக்கிறோம். கொல்லிமலையில் அதிகப்படியான மழை பெய்த நிலையில், அய்யாற்றுக்கு வரும் வெள்ளநீரால், அதன் வழித்தடத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. பின்னர், அவை உபரி நீராக காவிரியில் வீணாக கலக்கின்றன. எனவே அய்யாற் றின் உபரி நீரையும், திருத்தலையூர் ஏரி யில் வெளியேறும் உபரி நீரையும், புங்கன் வாரி ஏரி வழியாக 163 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருத்தியமலை ஏரிக்கு கொண்டு வருவதற்கு வழித்தடம் அமைக்க வேண் டும். இந்நீரை விவசாயத்திற்கு பயன்படுத் தும் வகையில் ஏற்பாடு செய்து தருமாறு, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.