districts

img

குடியிருப்பு பட்டாவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் சிபிஎம், பொதுமக்கள் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 - திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் குடி யிருப்பு பட்டாவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும். அந்தப் பகுதியில் மின் மயானம் அமைப்பதை கைவிட வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலையை தார்ச்சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.  சுகாதாரமான குடிநீர் வழங்க வேண் டும். மழைநீர் வடிகால் மற்றும் பாதாள  சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபி ஷேகபுரம் கிளைகள் மற்றும் பொது மக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை பஞ்சப் பூர் நால்நோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலா ளர் குருநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ராமச்சந்திரன், பகுதி செயலாளர் வேலு சாமி ஆகியோர் பேசினர். இதில் சிபிஎம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.

;