கரூர், பிப்.16- கரூர் மாவட்டம் மாய னூர் தடுப்பணையிலிருந்து, மதுக்கரை செல்லாண்டி யம்மன் கோவில் வரை காவிரி ஆற்றின் கரையோ ரங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் கரூர் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட் டம் பில்லிப்பட்டி அரசு நடு நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள், புதன்கிழமை யன்று திருச்சி மாவட்டம் தொட்டியம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் புதுக்கோட்டைக்கு திரும்பிச் செல்லும் வழியில் மாயனூர் கதவணையை பார்க்க வந்துள்ளனர். அப்போது மாணவிகள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தபோது, ஒரு மாண வியை தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து காப்பாற்ற முயற்சித்த 3 மாணவிகள் உட்பட 4 மாணவிகள் உயிரிழந் துள்ளனர். அவர்களது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், குடும்பத் தாருக்கு ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறது. மேலும் மாயனூர் காவிரி ஆற்றுப் பகுதியிலும், காவிரியின் கரையோ ரத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. இதுவே தொடர் உயிரி ழப்புகளுக்கு காரணமாக உள்ளது.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க, மாயனூர் தடுப்ப ணையிலிருந்து, மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் வரை காவிரி ஆற்றின் கரையோரங்களில் தடுப்புகள் அமைக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பார்வை யில் படும்படி அபாயகர மான பகுதி என்று கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவிகளின் பெற்றோர்கள் வருவதற்கு முன்பே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், கரூர் மாவட்ட நிர்வாகம் பெற்றோர்களின் கையெழுத்து மற்றும் அனுமதி இல்லாமல், உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேத பரி சோதனை செய்யப் பட்டுள்ளது கண்டனத் திற்குரியது. எனவே, இச்செயல்க ளில் ஈடுபட்டவர்களின் மீது உரிய விசாரணை மேற் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முதல்வர் அறி வித்துள்ள இழப்பீடு என்பது போதுமானது அல்ல, எனவே, இழப்பீடு தொ கையை உயர்த்தி வழங்கிட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.