புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் அரசமலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் புதிய அங்காடி கிளையை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆதி திராவிடர் இன மக்களுக்கு நத்தம் வீட்டு மனைப் பட்டாக்களுக்கான ஆணைகளை வழங்கினார்.