பொன்னமராவதி, ஜூலை 15-
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை நடை பெற உள்ளது.
இதனை முன்னிட்டு பொன் னமராவதி வலம்புரி வடுக நாதன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியருக்கு கலை இலக்கிய போட்டிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொன்னமராவதி வட்டாரக் கிளை சார்பில் நடத்தப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் இலகி ஜான் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் நல்லநாகு, அறிவியல் இயக்க வட்டார நிர்வாகிகள் மற்றும் ஆசிரி யர்கள் பங்கேற்றனர். ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிய ருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.