புதுக்கோட்டை, ஆக. 8-
ரூ.2.50 கோடிக்கு புத்தகங்கள் விற்று புதுக்கோட்டை புத்தகத் திருவிழா சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மும் இணைந்து ஜூலை 28 முதல் ஆக.6 வரை 10 நாட்கள் நடத்திய புதுக் கோட்டை 6 ஆவது புத்தகத் திருவிழா கடந்த ஞாயிறன்று நிறைவடைந்தது.
நிறைவு நாளான ஞாயிறன்று மாலை நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், “புத்தகத் திருவிழாவில் 107 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 10,500 மாணவர்கள் கோளரங்க நிகழ்வு களைக் கண்டுகளித்துள்ளனர். 10 நாட்களில் ரூ.2.50 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்றுச் சாதனை படைத் துள்ளது. இந்த புத்தகத் திருவிழா வெற்றிக்காக 750 தன்னார்வலர்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
நிறைவு விழாவில் சிறப்புரையாற் றிய திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், “நம்மைத் தூங்க விடாமல் செய்வதுதான் நல்ல புத்த கங்கள். பயணங்களின் போது நல்ல வழித்துணையாக புத்தகங்கள் இருக் கின்றன. கல்விதான் உண்மையான சொத்து. நாடு விடுதலை ஆவதற்கு முன்பு 7 சதவீதம்தான் கல்வியறிவு இருந்தது. விடுதலைக்குப் பிறகு 90 சதவீத கல்வியறிவு பெற்ற நாடாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்தி, நிதி ஒதுக்கீடு செய்வது பாராட்டுக்குரி யது” என்றார்.
முன்னாள் மாவட்ட ஆட்சியரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தின் முதன்மைச் செயல் அலுவல ருமான கவிதா ராமு, நடிகர் தாமு, குழந்தை எழுத்தாளர் விழியன், அறிவியல் இயக்க மாநிலச் செய லாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவல் மா.செல்வி, கோட்டாட்சியர் எஸ்.முருகேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திருவிழா ஒருங்கி ணைப்பாளர்கள் பங்கேற்றனர்.