நாகப்பட்டினம், பிப்.20- நாகப்பட்டினம் மாவட்டம் திருக் குவளை ஊராட்சி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பு மக்கள் நல பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பணி நிரந்தரம், காலமுறை ஊதி யம், அரசு ஊழியர்களுக்கான அனைத்து பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன் வைத்து கவனயீர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏரா ளமான மக்கள் நல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.