districts

img

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

மன்னார்குடி, மார்ச் 15- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தெற்கு ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை  பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை வகித்தார்.  பேரணி, பள்ளியில் இருந்து புறப்பட்டு மேலக் காடு, சின்னாங்கொல்லை, தெற்குகாடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று இறுதியில் பள்ளியை வந்தடைந்தது.  அரியலூர் அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி வியாழக்கிழமை நடை பெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் முரு கேசன், பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியானது சிறு வளூர், பள்ளகிருஷ்ணாபுரம், புதுப்பாளை யம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மீண்டும்  பள்ளியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார்.