அறந்தாங்கி, ஜன.23 - மணமேல்குடி அருகே குளத்தின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் தூங்காளைமேடு என்ற இடத்தில் குளத்தின் நடுவே சிறிய மணல் திட்டில் உயர்அழுத்த மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் 10 ஆண்டு களுக்கு மேலாக உள்ளது. மின் கம்பத்தை அகற்ற வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்குளத்தில் குளிக்கக் கூடிய சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அச்சத்துடன் குளிக்க வேண்டிய சூழல் உள்ளது. பலத்த காற்று வீசும் போது, குளத்தில் குளிக்க பொதுமக்கள் மிகவும் அச்சப் படுகின்றனர். எனவே மின் வாரியமும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுத்து, வேறு பகுதியில் இந்த மின் கம்பத்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.