புதுக்கோட்டை, நவ.17 - 71 ஆவது அனைத்திந்திய கூட்டு றவு வார விழாவினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதுக் கோட்டையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கருணை அடிப்படை யில் பணி நியமன ஆணைகள், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டு றவு சங்கங்களுக்கு கேடயங்கள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக் கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப் பாண்டியன், துணை மேயர் எம். லியாகத் அலி, கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப் பதிவாளர் அ.ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட கூட்டுற வுத் துறையின் சார்பில் நடந்த கூட்டுறவு வார விழாவில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர், சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தில் 22 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.232 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு சிறப்பு திட்டங் களையும், நலத்திட்ட உதவிகளை யும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரி வித்தார். பின்னர் 94 பயனாளிகளுக்கு ரூ.3.05 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளையும், சிறந்த கூட்டு றவு சங்கங்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளையும் வழங்கி பாராட்டினார். ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் இதை தொடர்ந்து பெரம்ப லூர், துறைமங்கலம் குழந்தைகள் நல மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி கள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் “ஊட்டச்சத்தை உறுதி செய்” இரண்டாம் கட்ட திட்டத்தின்கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கரூர் கரூர் அட்லஸ் கலைய ரங்கத்தில் சனிக்கிழமை கூட்டுறவு வார விழாவில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பா லாஜி, 3558 பயனாளிகளுக்கு ரூ.37.01 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். விழாவிற்கு மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் தலைமை வகித் தார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ண ராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.