தஞ்சாவூர் டிச.28 - தஞ்சாவூர் மாநகராட்சி கல்யாணசுந்தரம் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப் பினர்கள் துரை. சந்திரசேக ரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சா வூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசர் மேல் நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல் நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சா வூர் தூய இருதய பெண் கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தென் கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேம் பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 13 மேல்நிலைப் பள்ளி களில் பயிலும் 1,079 மாண வர்களுக்கு ரூ.52 லட்சத்து 87 ஆயிரத்து 100 மதிப் பிலான மிதிவண்டிகளும், 1,432 மாணவிகளுக்கு ரூ.68 லட்சத்து 16 ஆயிரத்து 320 மதிப்பிலான மிதிவண்டிக ளும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 3 ஆயிரத்து 420 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப் பட்டன. இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வன், தஞ்சாவூர் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மேத்தா, தஞ்சாவூர் வரு வாய் கோட்டாட்சியர் இலக் கியா, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர்- சிறுபான்மை நல அலுவலர் வீ.சுதாராணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மெ.கோவிந்த ராஜ், பள்ளித் தாளாளர் இரா.பன்னீர் செல்வம், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் என்.ஏ.அருண பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.