தஞ்சாவூர், அக்.9 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடை பெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 725 மனுக்களை பொது மக்கள் வழங்கினர். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மை பராமரிப்பு பணிகளில் சிறந்து வழங்கிய 18 பள்ளிகளுக்கு பாராட்டு கேடயங் களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பய னாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை கூடுதல் ஆட்சியர் வழங்கினார்.