districts

img

கதண்டு தாக்கி உயிரிழந்தவரின் வாரிசுக்கு நிவாரண நிதி வழங்கல்

மயிலாடுதுறை, செப்.11 - கதண்டு தாக்கி உயிரிழந்தவரின் வாரிசுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நிவாரண நிதிக்கான காசோலையை வழங் கினார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி  தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.  மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த பொதுமக்கள், ஆட்சியரிடம் மனுக் களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 62 மனுக் களும், வேலைவாய்ப்பு கோரி 21 மனுக் களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 18  மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள்  33, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 14 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 42 மனுக்களும் என  மொத்தம் 190 மனுக்கள் பெறப்பட்டன.  இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனு தாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறி வுறுத்தினார். முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சீர்காழி வட்டம் ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவர் கடந்த 31.8.2023 அன்று  திருக்கடையூரில் கதண்டு தாக்கி உயிரி ழந்தார். அவரின் வாரிசுதாரருக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  தமிழ்நாடு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.2  லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.