வேதாரண்யம், அக்.12 - உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும், உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அர சையும் கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் புதனன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகட்டூர், குரவப்புலம், தலைஞா யிறு, வேதாரண்யம் அஞ்சலகம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை.சுப்பிரமணியன், அம்பிகா பதி, வெற்றியழகன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து அரிய லூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான திருமானூரில் கடைகள் அடைக்கப்பட்டன. தபால் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணி வேல், காவிரி டெல்டா பாசன விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தங்க.தர்மரா ஜன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்டத் தலைவர் பாலசிங்கம், வணிகர் அணி மாவட்டச் செயலா ளர் கந்தன் உட்பட விவசாயிகள், திரு மானூர் பேருந்து நிலையத்தி லிருந்து தபால் நிலையம் நோக்கி பேரணியாக சென்று, போராட்டத் தில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடக்கோரி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தபால் நிலையம் முன்பு ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சி தலைமை தபால் நிலை யம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செய லாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் பழனிச் சாமி, மாவட்டச் செயலாளர் சுப்ரமணி யன், மாநகர் மாவட்டத் தலைவர் தங்கதுரை உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.