தஞ்சாவூர், மே 12-
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக் கிழமை நடைபெற்றது.
இதில், ஜெசிந்தா மார்ட்டின் பேசுகையில், ‘‘இந்திய வர லாற்றில் பல பெண்கள் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களைப் புரிந்து ஆண்களுக்கு பெண்கள் சரி சமம்தான் என உணர வைத் துள்ளனர்.
இச்சமுதாயத்தில் பெண்கள் உடல், மனம், பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படு கின்றனர். மேலும், பெண்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் தங்களைப் பாது காத்துக் கொள்ள கல்வியறிவு மிக முக்கியம். எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி, அவர் களுக்குக் கல்வியறிவு புகட்டுவது அவர்களது கடமை.
அனைத்து மாவட்டம் மற்றும் வட்டங்களிலுள்ள நீதிமன்ற வளா கங்களில் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. அங்கு பெண் கள் அனைவரும் தங்களுக்கு தேவையான சட்ட ஆலோச னைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
முகாமில், மாவட்டச் சட்டப்பணி கள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ்.இந்திரா காந்தி, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, தஞ்சாவூர் சிறப்பு அரசு குற்றவியல் நீதிமன்ற வழக்குரை ஞர் விவியன் அசோகன், தஞ்சா வூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் சி.அமர்சிங், செயலாளர் என்.சசி குமார், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் குளோரி குணசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.