districts

img

2 ஆவது நாளாக ஜமுக்காள காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்

மயிலாடுதுறை, ஆக.8-  மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து ஜமுக்காள காத்திருப்புப் போராட்டம்  2 ஆவது நாளான வியாழனன்றும் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொருளாளரும்,கிளை தலைவரு மான முனைவர் சேவியர் செல்வக் குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்  கிளை செயலாளர் பேராசிரியர் ஸ்ரீதர் தங்கத்துரை,  துணைத்தலைவர் கோபிநாத், இணை செயலாளர் ஷீலா எட்வர்டு,  பொருளா ளர்  ஜெயராஜ்   உள்ளிட்ட 50 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.