மயிலாடுதுறை, பிப்.2- மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லை வாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். கொள்ளி டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிர காஷ், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வம், தலைமை ஆசிரியர் தமிழ ரசி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொழுநோய் விழிப்புணர்வு
திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்பு ணர்வு பேரணி, பேச்சுப் போட்டி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இதில், கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் தலை மை வகித்தார். சுகாதார ஆய்வாளர்அன்பு ராஜ் வரவேற்றார். அரசு மருத்துவர்கள் நரகீஸ், நித்யா முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.