districts

img

நிரந்தரப் பணியிடங்களை தனியார்மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ ரத்து செய்க! சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் பேரணி

மன்னார்குடி, டிச.7 - 20 வகையான நிரந்தரப்  பணியிடங்களை தனியார் மயமாக்கி தமிழக தூய்மைப் பணியாளர் குடும்பங்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் அரசாணை எண். 152-ஐ உடனே ரத்து செய்ய  வேண்டும். பழைய பென்சன்  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஒப்பந்த தூய்மை தொழிலா ளர்கள், இதர பணியில் உள்ளவர்களையும் நிரந்தரப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழி லாளர்கள் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக மன்னார்குடி நகராட்சியில், புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தமும் பேரணி யும் நடைபெற்றது. பேரணிக்கு மதிப்புறு  தலைவர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். மன்னார் குடி ராஜகோபாலசாமி கோயிலில் இருந்து துவங்கிய பேரணியை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் சி.பிரகாஷ் துவக்கி வைத்தார். பேரணி நகரின்  முக்கிய வீதிகள் வழியாக நகராட்சியை வந்தடைந் தது.  பின்னர் ஜி.ரெகுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா, நக ராட்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.விஜயகுமார், சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பி.டி.லோகநாயகி, மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ், செயலாளர் எம்.முரளி, சிஐடியு இணைப்பு சங்க  நிர்வாகிகள் உரையாற்றி னர்.  பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.