districts

மே 19 இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, மே 13 -

   திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மே 19 அன்று  (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில்  தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு  பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த  அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம்.

   மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம்  உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின்  நகல், சுயவிபரக் குறிப்பு நகல்கள் மற்றும் ஆதார் அட்டை  நகலுடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பயன்பெறு கேட்டுக் கொள்ளப் படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.