districts

தனியார் பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

தஞ்சாவூர், ஜூலை 16-  

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (18). இவர் பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் குளத்தில் மீன்பிடித்து விற்பனை செய்து வருவாராம்.

    சனிக்கிழமை காலை திருச்சிற்றம்பலம் உப்புக்குளத்தில் மீன்பிடித்து இருசக்கர வாகனத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புக்கரம்பை பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார்.  அப்போது, நடுவிக்குறிச்சி அருகே தனியார் பள்ளி வேன் மோதியதில்,  பலத்த காயமடைந்து  ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யுவராஜ் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம், இறந்தவரின் உறவி னர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஈமச்சடங்கிற்காக குறிப்பிட்ட தொகை தருவதாகவும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இன்ஷ்யூ ரன்ஸ் தொகை பெற்று தருவதாகவும் பள்ளி நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. பின்னர் உடற்கூராய்வு சோதனைக்கான ஏற்பாடுகள் முடி வற்ற நிலையில், பள்ளி நிர்வாகம் கூடுதல் தொகை உடனடியாக வழங்க  வேண்டும் என வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் கடைவீதியில், சனிக்கிழமை  மாலை நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

     சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப் பாளர் பிரசன்னா, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.