districts

img

தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் பிரதமர் மோடி

திருச்சிராப்பள்ளி, ஏப்.1 - திருச்சி நாடாளுமன்றத் தொகுதி யில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக  வேட்பாளர் துரை.வைகோ போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்  மகேஸ் பொய்யாமொழி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, வேட்பாளர் துரை.வைகோ உள்ளிட்டோர் திருவெறும்பூர் அருகே  உள்ள திருநெடுங்களநாதர் கோவி லில் திங்களன்று சாமி தரிசனம் செய் தனர். பின்னர், திருநெடுங்குளத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு  பேசுகையில், “தீப்பெட்டி சின்னம் மக்க ளிடம் எளிமையாக சென்று உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரந்தோறும் தமிழகத்திற்கு வருகிறார். அவரை நாங்கள் தடுக்கவில்லை. அவர் வரும்போது தமிழகத்திற்கு ஏதாவது திட்டத்தை கொண்டு வந்தால் நல்லது.  தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க  வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். எப்படி அவருக்கு தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள். மத்தியில் பாஜகவை அடியோடு ஒழிக்க வேண்டும். ஒன்றிய அரசு தமிழ கத்தில் மெட்ரோ திட்டம் கொண்டு வந்தால், அதற்குரிய நிதியை வழங்க வேண்டும். ஆனால் அதற்கு உரிய நிதி யையும், வெள்ள நிவாரண நிதியையும்  வழங்கவில்லை. தமிழகத்திற்கு உரிய ஜிஎஸ்டி தொகை ரூ.20 ஆயிரம் கோடி யையும் வழங்கவில்லை.  இப்படி எந்தவித நிதியையும் தமிழ கத்திற்கு வழங்காமல், கடன் வாங்குவ தற்கும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு  செய்து, நிதி நெருக்கடியில் தமிழ கத்தை சிக்க வைக்கப் பார்க்கிறார் பிரத மர் மோடி. எனவே திமுக கூட்டணியில்  போட்டியிடும் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்”  என்றார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் சிலிண்டர் விலையை ரூ.500 ஆக  குறைப்போம் என்றும், பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65 ஆக  குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத் துள்ளார். எனவே, பொதுமக்கள் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார். பிரச்சாரத்தின்போது திருச்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர் நித்யா, ஒன்றியக் குழு உறுப்பினர் ரவிக் குமார், சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் அலெக்ஸ், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மருத்து வர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்டச்  செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி  ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பொது மக்கள் பங்கேற்றனர்.