திருச்சிராப்பள்ளி, ஜூலை 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி தலைமையில் திருச்சியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் வெள்ளியன்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலா ளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் ஆண்டு சந்தா 5 மற்றும் 6 மாத சந்தா 20-க்கான தொகை ரூ.31 ஆயி ரத்தை சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் கே.பாலபார தியிடம் வழங்கினார். தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பிற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நட ராஜன் தலைமை வகித்தார். இதில் 8 ஆண்டு சந்தா மற்றும் 6 மாத சந்தா இரண்டிற்கான தொகை ரூ.18,100-ஐ வட்ட பொருளாளர் இருதயராஜ் வழங் கினார். திருச்சி மத்திய பேருந்து நிலை யம் அருகே உள்ள கல்பனா ஆட்டோ நிலையத்தில் நடைபெற்ற இயக்கத் திற்கு, ஆட்டோ சங்க மாவட்டப் பொரு ளாளர் பழனியப்பன் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசி னர். இதில் நிலையத் தலைவர் அசோக்குமார், பகுதி தலைவர் அழகு மலை, பகுதி செயலாளர் வேல்முரு கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக 2 ஆண்டு சந்தா மற்றும் 3 ஆறு மாத சந்தாவிற் கான தொகையை கே.பாலபாரதியிடம் வழங்கினர். தரைக்கடை சங்கம் சார்பில் சங்க மாவட்டத் தலைவர் கணேசன், 3 ஆண்டு சந்தா மற்றும் 2 ஆறு மாத சந்தா விற்கான தொகையை வழங்கினார். கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் நொய்யல் பகுதியில் சந்தா சேர்ப்பு இயக் கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கவிஞர் பொன்.கந்தசாமியிடம் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், ஓராண்டுக் கான தீக்கதிர் சந்தா தொகையை பெற்றுக் கொண்டார். கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.