districts

சிறந்த கலைஞர்களுக்கு சான்றிதழ், காசோலை வழங்கல்

திருச்சிராப்பள்ளி, அக்.25 - 2021 - 2022 ஆம் ஆண்டில் திருச்சிராப் பள்ளி மாவட்டக் கலை மன்றம் வாயி லாக மாவட்ட அளவில் சிறந்த கலைஞர் களை தேர்வு செய்து அவர்களுக்கு வயது மற்றும் கலைப் புலமையின் அடிப் படையில் கலை விருதுகள் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதிற்குட்பட்ட கலைப் பிரிவில் பரதநாட்டியக் கலைஞர் களுக்கு ‘கலை இளமணி’ விருதும், 19  வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைப் பிரிவில் ஓவியக் கலைஞர்களுக்கு ‘கலைவளர்மணி’ விருதும், 36 வயது முதல் 50 வயதுப் பிரிவில் குரலிசைக் கலைஞர், நாதசுரக் கலைஞர், நாடகக் கலைஞர் ஆகியோர்களுக்கு ‘கலைச் சுடர்மணி’ விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட பிரிவில் நாடகக் கலைஞர்களுக்கு ‘கலைநன்மணி’ விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் நாடகக் கலைஞர்களுக்கு ‘கலைமுதுமணி ’விருதுகளையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.  மேலும், மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 20.10.2022 அன்று  துவங்கப்பட்ட மண்டல அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைக் காட்சி யில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங் களிலிருந்து ஓவியங்கள் வரப்பெற்று,  அந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி, அதில் சிறந்தவை தேர்வு செய்யப்பட் டன. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார்.  இந்நிகழ்வில், திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்கு நர் (பொ.)நீலமேகன் பங்கேற்றார்.