districts

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி

தஞ்சாவூர், டிச.22 - மீனவ சமுதாயத்தை சார்ந்த, பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க, சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயற்சி மையத்துடன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு எண்.834/6, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.