தஞ்சாவூர், மே 27-
தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள் ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்ய தொடங்கி, இரவிலும் நீடித்தது. நாஞ்சிக் கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்த தால், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இத னால், நாஞ்சிக்கோட்டை சாலையில் பெரும்பா லான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
தஞ்சாவூர் மோத்திரப் பசாவடி அருகே கம்பி பாலம் அருகே மரக்கிளை முறிந்து, அங்குள்ள வீட்டின் மீதான ஓடுகள் மீது விழுந்தது.
இத னால், வீட்டில் இருந்த ஒரு வருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல, நாஞ்சிக் கோட்டை சாலை ரயில் நகரில் மரக்கிளை முறிந்து விழுந்ததால், மின்கம்பம் சாய்ந்து மரத் தடியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
தஞ்சாவூர் கீழ்ப்பாலத் தில் சுமார் 2 அடி உயரத் துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப் பிவிடப்பட்டன. பின்னர், இரவில் கீழ்ப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.