ஆலப்புழா, ஜன.23- கேரளத்தில் கோவிட் மூன்றாம் அலையின் தீவிர பரவல் காரணமாக ஆலப் புழா சிபிஎம் மாவட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28, 29, 30 ஆகிய தேதிகளில் கனிச்சுகுளங்கரா வில் மாநாடு நடைபெற இருந் தது. கோவிட் பரவல் குறைந்த பின் அடுத்த தேதி முடிவு செய்யப்படும். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ கட்சியி னரும், ஊழியர்களும், வெகு ஜன அமைப்புகளும் முன்வர வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ஆர்.நாசர் கேட்டுக்கொண்டார்.