districts

திருச்சி முக்கிய செய்திகள்

டிச.20-இல் தபால் சேவை,  ஓய்வூதியர் குறைதீர் முகாம்

கும்பகோணம், டிச.11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் தபால் கோட்ட கண்காணிப்பா ளர் கும்பசுவாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ,“கும்பகோ ணம் கோட்ட அளவிலான அஞ்சல் சேவை மற்றும் ஓய்வூதிய தாரர் குறைதீர் முகாம் கும்ப கோணம் கோட்ட அஞ்சல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் டிச.20 அன்று நடக்கிறது. இந்த முகாமில் நேரில் மற்றும் தபால் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். தபாலில் புகார்கள் வந்து சேர  வேண்டிய கடைசி நாள் டிச.15.  தபால் கவரில், தபால் அனுப்பப் பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பிய வரின் பெயர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணி யார்டர்), துரித தபால், பதிவு  தபால் ஆகியவற்றுக்கான விவ ரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.  புகாரானது சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய  அஞ்சல் ஆயுள் காப்பீடு சம்பந்த மாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலு வலகத்தின் பெயர், ஏதேனும் இருப் பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.  புகார் குறித்த தபால்களை  ‘அஞ்சல் கோட்ட கண்காணிப்பா ளர், கும்பகோணம்’ என்ற முக வரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது அஞ்சல் சேவை மற்றும் ஓய்வூதியதாரர் குறைதீர் முகாம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: பயணிகள் 27 பேர் காயம்

திருவாரூர், டிச.11 - அரசு பேருந்து மீது கார்  மோதிய விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்து, திருவா ரூர் மாவட்டம் நீடாமங்க லம் அருகேயுள்ள வைய களத்தூர் முடுக்குத்தோப்பு பகுதியில் சாலையின் வளை வில் திரும்பிய போது, எதிரே திருவாரூரிலிருந்து வேகமாக வந்த கார் பேருந்தின் மீது மோதியது. இதனால் அரசுப் பேருந்து பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நிகழ்ந்த இடத் திற்கு விரைந்து வந்த நீடா மங்கலம் காவல் ஆய்வா ளர் சிவப்பிரகாசம், தீய ணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையி லான போலீசார், பெண்கள்  உள்பட 27 பேரை மீட்டு  திருவாரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் அப்பகுதி பொதுமக்கள், பேருந்துக் குள் இருந்தவர்களை மீட்க உதவி செய்தனர். அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்த உடனேயே, காரில் வந்த இருவர் தப்பியோடி விட்டனர்.  தஞ்சாவூர் முதல் நாகப் பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை சாலைப் பணி கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. இதுமட்டுமின்றி, வைய களத்தூர் முடுக்குத்தோப்பு பகுதி ஆபத்தான வளை வுகளுடன் உள்ளது. சாலை யோர பள்ளத்தில் மிகப்பெ ரிய தடுப்புச் சுவர் கட்ட வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ் சாலைத் துறையினர் கண்டு  கொள்ளவில்லை.  விபத்து குறித்து நீடா மங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

செந்தொண்டர் பயிற்சி சிறப்பு பேரவை

திருவாரூர், டிச.11-  திருவாரூர் மாவட்ட கட்சி  அலுவலகத்தில் செந்தொண் டர் பயிற்சி சிறப்பு பேரவை  நடைபெற்றது.  பேரவைக்கு அமைப் பின் மாவட்ட கன்வீனர் எஸ். எம்.சலாவுதீன் தலைமை வகித்தார். மாநில பொறுப் பாளர் பி.ஸ்டாலின் செந் தொண்டருக்கான சமூகப் பணிகளை விளக்கி உரை யாற்றினார்.  முன்னதாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. என். முருகானந்தன், அமைப்பின் மாவட்ட பொறுப் பாளர் கே.பி.ஜோதிபாசு ஆகியோர் பேசினர். வாலி பர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.கே.வேலவன், தலைவர் எம்.எஸ்.ஜெய் கிஷ், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் ப.ஆனந்த் மற்றும் மாவட்ட, ஒன்றிய  உறுப்பினர்கள் பங்கேற்ற னர். டிசம்பர் 25 அன்று வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி யில், திருவாரூர் மாவட்டத் திலிருந்து 200 செந்தொண் டர்கள் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தோழர் கே.கே.என். குட்டி முதலாம் ஆண்டு நினைவுதினம்

திருச்சிராப்பள்ளி, டிச.11 - திருச்சி மாவட்ட தேசிய ஓய்வூதியர்களின் ஒருங்கி ணைப்புக் குழு (NCCPA) சார்பில் அக்குழுவின் மேனாள்  பொதுச் செயலாளர் தோழர் கே.கே.என்.குட்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு என். ராஜகோபால் (டிஆர்பியு) தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கத்தின்  அகில இந்திய தலைவரும், தேசிய ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய பொதுச் செயலருமான தோழர் கே.ராகவேந்திரன், கே.கே.என். குட்டி-யின் சேவைகளை நினைவு கூர்ந்து சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். செயலர் கோபால் சுவாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

ஓய்வு பெற்ற தொழிலாளியை  பணிக்கு அமர்த்த சிஐடியு எதிர்ப்பு

தஞ்சாவூர், டிச.11-  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தஞ்சை  புறநகர் கிளை பணிமனையில், நிரந்தர தொழிலாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை, ஓய்வுபெற்ற பணியாள ருக்கு வழங்கிய வணிக மேலாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் பணிமனை சிஐடியு கிளைச் செயலாளர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் காரல் மார்க்ஸ், மண்டல பொருளா ளர் ராமசாமி, விரைவுப் போக்குவரத்துக் கழக மத்திய  சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன், ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் என்.குருசாமி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே. அன்பு, சா.செங்குட்டுவன், தரைக்கடை சங்க தலைவர் மணிமாறன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஜீவா, பணிமனை பொருளாளர் ராஜசேகரன், விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை பொருளாளர் ஆர். முருகேசன், விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை  துணை தலைவர் டி.பரத்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் வணிக மேலா ளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத் தப்பட்டன.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பொன்னமராவதி, டிச.11- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  ஆலவயல், பொன் புதுப்பட்டி குறுவள மையத்திற்கு உட்பட்ட 12 அரசு தொடக்க நடுநிலை மற்றும் மேல்நிலை  பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவகுமார் துவக்கி  வைத்தார்.  இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு செயல்ப டும் விதம், அதன் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து  தெரிவிக்கப்பட்டது. குறுவள மைய ஆசிரியர் பயிற்று நர் கல்யாணி பயிற்சியளித்தார். பள்ளி மேலாண்மை குழு  பயிற்சி கையேடு மற்றும் நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த உரிமையாளர் பலி

புதுக்கோட்டை, டிச.11 - பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் காய மடைந்து சிகிச்சை பெற்று வந்த, அதன் உரிமையாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை நகருக்கு அருகே கோவில்பட்டி அடப்பன்வயல் பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல் பட்டு வந்தது. மூர்த்தி (45) என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு ஆலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூர்த்தி படுகாய மடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர்  ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். திருக்கோ கர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிச.19 கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  அட்டை வழங்கும் முகாம்

கும்பகோணம், டிச.11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் டிச.19 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள்  நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை  பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே  உள்ள கே.எம்.எஸ்.எஸ் வளாகத்தில்  டிசம்பர் 19  (செவ்வாய்க்கிழமை) அன்று சிறப்பு முகாம் நடைபெறு கிறது. முகாமில் அரசு  மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்க  உள்ளனர். மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திற னாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை  நகல், 6 புகைப்படம் மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற  வந்து மருத்துவ குறிப்புகள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இதில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற் றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.

சீருடைப் பணியாளர் தேர்வு: புதுகையில் 4942 பேர் எழுதினர்

புதுக்கோட்டை, டிச.11 - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 3359 இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவ லர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. புதுக் கோட்டையில் இத்தேர்வினை மொத்தம் 4942 பேர் எழுதி னர். 905 பேர் தேர்வெழுத வரவில்லை.

சாலை, குடிநீர், வாய்க்கால் செய்து தரக் கோரி
போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தையில் தீர்வு

திருச்சிராப்பள்ளி, டிச.11 - திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத் திற்குட்பட்ட கீழப்பட்டியில் சாலை, சுகாதார மான குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், விளை யாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பலமுறை மனு  கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்தும், அடிப்படை வசதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட  அனைவரும் ஒன்றுதிரண்ட போது, அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில், சில கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித் தார். அதன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் அய்ய னார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் சேதுபதி, ஒன்றியச் செயலளார் ஏழு மலை, ஒன்றியத் தலைவர் மதியழகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், பகுதி  குழு உறுப்பினர் பொன்.வேலுசாமி ஆகி யோர் பேசினர். கிளைச் செயலாளர் சக்தி வேல் நன்றி கூறினார்.

பொதுமக்கள், பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்: எலக்ட்ரிசிட்டி போர்டு ஊழியர்கள் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.11- தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளா யீஸ் பெடரேசன் மாநில செயற்குழு கூட்டம்  திருச்சியில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத் திற்கு மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.  மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார்,  மாநில செயல் தலைவர் ஜெயராமன், மாநில  செயலாளர்கள் திருச்சி சிவச்செல்வன், நாகை செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  கூட்டத்தில் 1.12.2019 முதல் 16.5.2023 வரை வாரிய பணியில் சேர்ந்த 12,000 தொழிலா ளர்களுக்கு 1.12.2019 முதல் 6 சதவீத ஊதிய  உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56,000 காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேர்வு  செய்து நிலுவையில் உள்ள 5000 கேங்மேன்  பணியாளர்களுக்கும், விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணி உத்தரவு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டத்திற்கான மாறுதல் உத்தரவை கால  தாமதமின்றி வழங்க வேண்டும். கள உதவி யாளர்களை கருத்தில் கொண்டு கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். தினசரி நடக்கும் விபத்துகளையும், களப்பணியில் உள்ள காலிப் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழி லாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக பி.டபுள்யூ.டி ஷெட்டியூல் ரேட் அடிப்படையில் தின ஊதியம் வழங்க  வேண்டும்.  பொதுமக்களுக்கும், பணியாளர்களுக் கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றிய அர சின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு  அரசு கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், திட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில அமைப்பு செயலாளர் நாராயணமூர்த்தி வர வேற்றார். மாநில பொருளாளர் லூர்து பாஸ்டின்  ராஜ் நன்றி கூறினார்.