தஞ்சாவூர், மே 6-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியிலுள்ள கருவேல மரக்காட்டுக்குள் 2021-ஆம் ஆண்டு கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த நாகை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் நிகழ்வி டத்தில் விசாரணை நடத்தி, 1.25 கிலோ கஞ்சா பொட்டலங் களைக் கைப்பற்றி, பூக்கொல்லை எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த செல்வராஜ் (65), இவரது மனைவி மங்களத்தை (52) ஆகி யோரை கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிபதி (பொ) சுந்தர்ராஜன் விசாரணை செய்து, செல்வராஜ், மங்களத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித் தார்.