districts

img

வாலிபர் சங்கம் நடத்திய பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

மயிலாடுதுறை, ஜன.17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், டி.மணல்மேடு கிராமத்தில் வாலிபர்  சங்கம் சார்பில் 27 ஆம் ஆண்டு பொங்கல் விளை யாட்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சி சங்கத்தின்  கிளைத் தலைவர் ஏ.ரவி தலைமையில் நடை பெற்றது. பலவித பாரம்பரிய, மண்சார்ந்த விளை யாட்டு போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட சிறு வர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆர்வமு டன் பங்கேற்று வெற்றி பெற்றனர். மாலையில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளரும் ,மாநிலக்குழு உறுப்பினருமான பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஏ.ரவிச் சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பி.குணசுந்தரி மற்றும்  வாலிபர் சங்க நிர்வாகிகள் சிறப்புரையாற்றி னர். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து நள்ளிரவு  வரை நடந்த கலை நிகழ்ச்சிகளை 500-க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.  திருச்சிராப்பள்ளி வாலிபர் சங்கம் மற்றும் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் இணைந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், உசிலம்பட்டி கிராமம், தவுட்டுப்பட்டியில் 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் காமன்வெல்த், மாநில அளவிலான விளையாட்டு போட்டி களில் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா  ஆகியவற்றை நடத்தின. விழாவிற்கு வாலிபர் சங்க கிளைச் செய லாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விளையாட்டு போட்டிகளை ஊர் நாட்டாண்மை பழனியாண்டி மற்றும் ஊர் முக்கியஸ் தர்கள் துவக்கி வைத்தனர்.  மாலையில், தென்னாப்பிரிக்கா காமன் வெல்த் போட்டியில் பழு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற வீராங்கனை ராஜேஸ்வரி விநா யகமூர்த்தி, வீரர் பாலமுருகன் மற்றும் மாநில அளவிலான வாள் சண்டை பிரிவில் வீரர் கோபிநாத், வீரர் ரஞ்சித் குமார், சிலம்பம் பிரிவில் வீராங்கனை பாண்டி வினோதினி, வீரர் தேக்கமலையான் ஆகியோரை பாராட்டி பரிசுகளும், பொங்கல் விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் பாலாஜி, கட்டுமான சங்க மாநில துணைத் தலை வர் ராஜா முகமது, மாவட்டத் தலைவர் தியாக ராஜன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலக்குமார், வட்டச் செயலாளர் அய்யாவு, வட்டப் பொருளாளர் வினோத்குமார், கட்டு மான சங்க வட்டத் தலைவர் மணி, வட்டச் செய லாளர் நித்தியானந்தம், வட்ட துணைச் செய லாளர் முத்துச்சாமி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லுச்சாமி ஆகியோர் பரிசு களை வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில்  ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூர்

வாலிபர் சங்கத்தின் கரூர் மாநகரத்திற் குட்பட்ட கோடங்கிபட்டி கிளை சார்பில் 36  ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. ஜன.15,16 ஆகிய இரண்டு  நாட்கள் நடைபெற்ற போட்டிகளில், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆர்வமு டன் கலந்து கொண்டனர். சைக்கிள் போட்டி,  கோலப் போட்டி, ஓட்டப்பந்தயம், நடனம், பேச்சு  போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. வாலிபர் சங்கத் தின் கிளை தலைவர் எஸ்.சஞ்சய் தலைமை வகித்தார். முன்னாள் கிளை செயலாளர் ஆர். முருகன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவரும், கரூர் மாநகராட்சியின் 41  ஆவது வார்டு கவுன்சிலருமான எம்.தண்ட பாணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மு.சிவா ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினர். கிளை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொத்தப்பாளையம் வாலிபர் சங்கத்தின் கொத்தப்பாளையம் கிளை சார்பில் 16 ஆம் ஆண்டு பொங்கல்  விளையாட்டு விழா நடைபெற்றது. விழா விற்கு சங்கத்தின் கிளை செயலாளர் ஜி.நவீன்  காஸ்ட்ரோ தலைமை வகித்தார். ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி, கபடி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றன. சிஐடியு கரூர்  மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணி யன், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பி.சிவா, அரவக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர் கே.வி.கணேசன் ஆகியோர் போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.