districts

திருச்சி முக்கிய செய்திகள்

பொங்கல் விழா போலீசார் குடும்பத்துக்கு  விளையாட்டுப் போட்டி

திருச்சிராப்பள்ளி, ஜன.14 -  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கே.கே.நகர் ஆயுதப்படை மைதா னத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநகர காவல் ஆணையர் காமினி, காவல்துறை அதிகாரி கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.  விழாவின் ஒருபகுதியாக காவல்துறையினர் குடும் பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு என தனித்தனியாக 20,25,75,100 மீட்டர் ஓட்டம்,  சாக்கு பையுடன் ஓட்டம், சைக்கிள் ஸ்லோ ரேஸ், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.  அரியலூர்  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை யில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா நடை பெற்றது. ஜெயங்கொண்டம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் பணிபுரியும் போலீசார் அனைவரும் தங்கள்  குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

திருச்சியில் 3 இடங்களில்  ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

திருச்சிராப்பள்ளி, ஜன.14 - திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களில் ஜல்லிக் கட்டு நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.  முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில், முதல் ஜல்லிக் கட்டாக ஜன.16 மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவெறும் பூர் அருகே உள்ள சூரியூரிலும், ஜன.19 அன்று திருச்சி  ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு பகுதி யிலும், மணப்பாறையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

இந்தியாவில் தேர்தல்கள்’  ஜன.21 வினாடி-வினா போட்டி

திருவாரூர், ஜன.14 -  தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறை யில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு SVEEP திட்டத்தின் படி, பொதுமக்களுக்கு ‘இந்தியாவில் தேர்தல்கள்’ என்ற  தலைப்பில் மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி, ஜன.21 (ஞாயிறு) அன்று காலை 11 முதல்  11.15 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in  Quiz 2024 என்ற இணையதளத்தில் ஜன.18, 19 ஆகிய தினங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு  செய்பவர்கள் அவர்களின் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண்டும்.  மேலும், விவரங்களை மாநில உதவி மைய எண். 180042521950 மற்றும் மாவட்ட உதவி மைய எண்.1950 வாயி லாக தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவ லர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

பாபநாசம், ஜன.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பண்டார வாடை அருகே உள்ளது அம்மாபேட்டை ஒன்றியம், தேவ ராயன் பேட்டை. இந்த கிராமம் வழியே சென்று வந்த 2  மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால், இந்த கிராமம்  மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாண வர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “நிறுத்தப் பட்ட 2 மினி பேருந்துகளை மீண்டும் இயக்குவதுடன், அரசுப் பேருந்துகளையும் இயக்க வேண்டும். பொன் மான் மேய்ந்த நல்லூரில் உள்ள வி.ஏ.ஓ.அலுவலக கட்டி டம் பழுதடைந்து கிடக்கிறது. அதை இடித்து விட்டு புதி தாக கட்டித் தர வேண்டும். தேவராயன்பேட்டையில் பயனற்ற நிலையில் உள்ள மகளிர், குழந்தைகள் சுகாதார  வளாகத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  தேவராயன் பேட்டையில் சமுதாயக் கூடம், அங்கன் வாடி, ரேசன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட வற்றை தரமாக கட்டித் தர வேண்டும்” என்றனர்.

ஜன.19 திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, ஜன.14 -  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஜன.19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.  இதில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணி யிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த  வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல், சுய விவ ரக்குறிப்பு நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் நாட்டு விவசாயத்தை மீட்டெடுக்க அனைவரும் முன்வருக! அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

நாகர்கோவில்,ஜன.13- கன்னியாகுமரி மாவட்டம் ஊரக  வளர்ச்சித் துறை தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறை மற்றும் வேளாண் வணிகம் - விற்பனைத் துறை சார்பில்  முத்தலக்குறிச்சி மற்றும் சடையமங்க லம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய ரூர்பன் இயக்கத்தின் கீழ் தேன்  பதப்படுத்தும் அலகு, பழக்கூழ் தயா ரிக்கும் அலகு மற்றும் வாழை மதிப்பு கூட்டுதல் அலகு ஆகியவற்றை சனிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் த.மனோதங்க ராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமை வகித்தார்.  பின்னர் அமைச்சர் பேசுகையில்,  நீங்கள் தயாரிக்க கூடிய பொருள் தரமா னதாக இருக்க வேண்டும். உங்களுக்கு  அரசு தரப்பில் இருந்து எந்த உதவி கள் தேவைப்பட்டாலும் எங்களிடம் கூறினால் நாங்கள் அதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக யளவு விவசாயபொருட்கள், உற்பத்தி பொருட்கள், கிடைக்கிறது. அதனை எவ்வாறு பாதுகாப்பது, சந்தைப்படுத்து வது, நாஞ்சில் நாட்டில் மறைந்த பழமை வாய்ந்த விவசாயத்தினை மீட்டு எடுப்பதற்கும் பொதுமக்கள், விவசாயி கள், சுயஉதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும் என்றார்.

கால்நடை மருத்துவ முகாம்

பாபநாசம், ஜன.14 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  காவலூரில் கால்நடை மருத்துவ மற்றும் விழிப் புணர்வு முகாம் நடந்தது. புண்ணியநல்லூர் கால்நடை உதவி மருத்து வர் ரகுநாத், கால்நடை  ஆய்வாளர் ராமச்சந்தி ரன், கால்நடை பராமரிப்பு  உதவியாளர் விஜயா  ஆகியோர் கால்நடை களுக்கு சிகிச்சை மேற் கொண்டனர். சிறந்த கிடேரி கன்றுக்கான பரிசை ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் வழங்கினார். விவசாயி களுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

வேளாண் வளர்ச்சித் திட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி 

தஞ்சாவூர், ஜன.14-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட் டாரத்தில் பள்ளத்தூர், சொக்கநாதபுரம் மற்றும்  கட்டையங்காடு, உக்கடை கிராமத்தில், பாரம்பரிய வேளாண்மை  வளர்ச்சித் திட்டத்திற் காக குழு தேர்வு செய்யப் பட்டது. இதில் 26 விவசாயி களை ஒருங்கிணைத்து குழுவாக அமைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி. சாந்தி தலைமை வகித்து,  மீன் அமிலம், ஜீவாமித் தம், பஞ்ச காவ்யா, அமிர்த  கரைசல் ஆகியவை தயா ரிக்கும் முறைகள் பற்றி கூறினார். பேராவூரணி விதைச் சான்று அலுவலர் வெங்க டாசலம் பேசுகையில், “இத்திட்டத்தில் இயற்கை  மற்றும் பாரம்பரிய முறை யில் பயிர் சாகுபடி செய்திட வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை மூலமாக பதிவு செய்யும் முறை, மூன்று  ஆண்டுகளுக்கு தொ டர்ந்து மண் மற்றும் நீர்  ஆய்வுகள் மேற்கொள் ளப்பட வேண்டும். இதன டிப்படையில் அங்கக சத்துகள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லி கழிவு கள் இருப்பதை அறிந்து  சாகுபடி செய்ய வேண் டும். பங்களிப்பு உத்தர வாத திட்டம், அதன்மூலம் விவசாயிகள் தங்களுக் குள்ளே குழு அமைத்து வயல்களை ஆய்வு செய்து படிவங்களை சமர்ப்பித்திட வேண்டும்” என்றார். 

ஒரே நாளில் 400 ஊராட்சி  செயலர்கள் இடமாற்றம்

விருதுநகர், ஜன.14- விருதுநகர் மாவட்டத் தில் பணிபுரிந்து வரும் 400  ஊராட்சி செயலர்களை ஒரே நாளில் மாவட்ட  நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது. விருதுநகர் மாவட் டத்தில் மொத்தம் 450  ஊராட்சிகள் உள்ளன. இங்கு ஊராட்சி செய லர்களாக பணிபுரிந்து  வருவோர், நீண்ட கால மாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருவதாலும், அவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்த வண் ணம் உள்ளதாலும் மொத்தமுள்ள 450 ஊராட்சிகளில் 400  ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்து  உத்தரவிட்டது. இதனால் ஊராட்சி செயலர்கள் பலர் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

நாகர்கோவில், ஜன.14- குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி  துறைமுகத்தில் இருந்து  ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பைபர் படகு தீ பிடித்து எரிந்தது. இத னால் மீனவர்கள் கடலுக் குள் குதித்து, அருகில் இருந்த மாற்று படகில் ஏறி உயிர் தப்பினர். இந்த நிலையில் படகில்  பற்றி எரிந்த தீயை  அணைக்க முயன்றும் முடி யாமல் போக, அங்கிருந்து தப்பி கரை திரும்பியுள்ளனர்.